பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகள் தற்போது நஞ்சை உழவு செய்து வரும் காலகட்டம் என்பதால் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. 3 மணிக்கு பிறகு உழவு செய்ய முடியாத சூழல் உள்ளதால் விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த காலகட்டத்தில் விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் மாலை 6 மணி வரை மும்முனை மின்சாரம் வழங்கிட மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.