கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதியில் உள்ள சில சாலைகள் தனிநபர் ஆக்கிரமிப்பால் சுருங்கி போய்விட்டது. இதனால் அவ்வழியாக வாகன ஓட்டிகள் சென்று வர மிகவும் சிரமப்படுவதோடு, விபத்துகளும் நிகழ வாய்ப்புகள் உள்ளது. எனவே சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.