விருதுநகர் பாண்டியன் நகர் சாலை பகுதியில் அதிக அளவில் தெருநாய்கள் சுற்றிதிரிகின்றன. இந்த நாய்கள் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளை துரத்துவதால் விபத்திலும் சிக்குகின்றனர். மேலும் சாலையில் செல்லும் வாகனங்களின் குறுக்கே பாய்ந்து விபத்துகளையும் ஏற்படுத்துகிறது. எனவே இப்பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
