பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியம், ஓலைப்பாடி அரசு பள்ளியைச் சுற்றி அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கால்நடைகளை கட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.