பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வேப்பந்தட்டை பஸ் நிலையத்தில் பொதுமக்கள் நிற்கும் இடத்திலே பெரிய அளவிலான விரம்பர பதாகைகள் வைக்கப்பட்டு வருகிறது. தற்போது காற்றடி மழை காலம் என்பதால் இதன் அருகே பொதுமக்கள் நிற்கும்போது சாய்ந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து விளம்பர பதாகைகளை அகற்றிவிட்டு இப்பகுதியில் விளம்பர பதாகை வைக்க தடை விதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.