திருச்சி மாநகராட்சி 47-வது வார்டுக்கு உட்பட்ட ஜெய்லானியா மெயின் தெருவில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.