கரூர் மருத்துவகல்லூரிக்கு தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். இங்கு வாகனங்கள் நிறுத்துமிடம் ஏற்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் வெளியே மாநகராட்சி இடத்தில் வாகனங்கள் நிறுத்துமிடம் ஏற்படுத்த வேண்டும். மேலும் நோயாளாா்களை பாா்க்க வருபவர்களுக்கென கழிவறை வசதி இல்லை. இதனால் மருத்துவமனைக்கு வருபவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மருத்துவக்கல்லூரி முதல் ராஐாநகர் வரை உள்ள சாலை மோசமான நிலையில் உள்ளது. அதை தார்சாலையாக அமைத்தால் வாகன போக்குவரத்திற்கு உதவியாக இருக்கும். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.