பெரம்பலூரில் யூரியா உரம் தட்டுப்பாடு

Update: 2022-10-16 12:05 GMT
பெரம்பலூர் மாவட்டம், மருவத்தூர் மற்றும் வி.களத்தூரில் விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். தற்போது பெய்து வரும் மழையை பயன்படுத்தி மக்காச்சோள பயிருக்கு யூரியா உரம் தெளிக்க விவசாயிகள் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் யூரியா உரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி தனியார் உரக்கடைகள் உரங்களின் விலையை அதிக விலைக்கு விற்கின்றனர். இதனால் விவசாயிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்