கடலூர் பகுதியில் கொசுத்தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இதனால் மாநகர மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் மாநகர மக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. எனவே கடலூரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கொசுமருந்து அடிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.