நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு சுற்றுலா செல்பவர்கள் பல்வேறு இடங்களில் செல்பி எடுத்து மகிழ்கின்றனர். அதேபோல அடிவாரத்தில் இருந்து மலைக்கு செல்ல 70 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்ல வேண்டும். அவ்வாறு மலைச்சாலை வளைவுகளில் செல்லும்போது சிலர்் ஆர்வ மிகுதியால் ஆபத்தை உணராமல் தடுப்பு சுவரின் ஓரமான பகுதிக்கு சென்று செல்பி எடுக்கின்றனர். எனவே கொல்லிமலை சாலையில் அபாய பகுதியில் செல்பி எடுப்பதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முரளி, கொல்லிமலை, நாமக்கல்.