நாய்கள் தொல்லை

Update: 2022-10-12 14:22 GMT

விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டி, ராமமூர்த்தி ரோடு, பாண்டியன்நகர் பகுதியில் நாய்கள் கூட்டம், கூட்டமாக சாலையில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்துவதால் வாகனஓட்டிகள் சாலையில் செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் நாய்களால் வாகன விபத்துகளும் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. எனவே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். 

மேலும் செய்திகள்