திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் கீழவாசல் ரெயில்வே கேட்டில் இருந்து ஸ்ரீரங்கம் ரெயில்நிலையம் வரை சாலையின் இருபுறமும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தியின் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலைகளில் குவிந்து கிடந்த குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர். இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.