புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா, தென்னம்பாடி ஊராட்சி கூத்தக்குடி கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள கர்ப்பிணிகள் மாதம் ஒருமுறையும், நிறைமாத கர்ப்பிணிகள் வாரம் ஒரு முறையும் பரிசோதனைக்காக நீர்பழனி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டி உள்ளது. கூத்தக்குடி கிராமத்தில் இருந்து நீர்பழனிக்கு சுமார் 25 கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டி உள்ளது. இதனால் கர்ப்பிணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் அருகாமையில் உள்ள மலைக்குடிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிசோதனை செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.