விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா சத்திரப்பட்டி கிராமத்தில் உள்ள நீர்தேக்க தொட்டி சேதமடைந்து காணப்படுகிறது. நீர்தேக்க தொட்டியின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் உள்ளது. இந்த நீர்தேக்க தொட்டியால் பொதுமக்கள் அச்சம் அடைகின்றனர். எனவே இப்பகுதியில் புதிய நீர்தேக்க தொட்டி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.