விருதுநகர் மாவட்டம் முகவூர் வனமூர்த்திலிங்கம் பிள்ளை தெருவில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இப்பகுதியில் நாய்களின் நடமாட்டத்தால் பொதுமக்கள் வீதிகளில் செல்லவே அச்சமடைகின்றனர். சில நாய்கள் நோயுற்று திரிவதால் அவை பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகின்றன. எனவே நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.