அங்கன்வாடி மையம் பராமரிக்கப்படுமா?

Update: 2022-10-05 15:17 GMT

விளாத்திகுளம் அருகே செங்கோட்டை கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த கட்டிடத்தின் மேற்கூரை சேதம் அடைந்துள்ளது. இதனால் அச்சத்துடன் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை மையத்திற்கு அனுப்பி வருகின்றனர். அதுமட்டுமின்றி கட்டிடத்தின் அருகே புதர் மண்டி கிடக்கிறது. மேலும் மையத்தின் உட்புறத்தில் சமையலறையின் கதவுகள் உடைந்துள்ளது. எனவே அங்கன்வாடி மையத்தை சீரமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்