பொதுமக்களை அச்சுறுத்தும் தெருநாய்கள்

Update: 2022-07-15 13:52 GMT
கடலூர் மஞ்சக்குப்பம் நேரு நகர் 2-ல் ஏராளமான தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. அவை சாலையில் தனியாக நடந்து செல்பவர்களை விரட்டிச் சென்று கடிக்கின்றன. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் சாலையில் தனியாக நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். ஆகவே பொதுமக்களை அச்சுறுத்தி வரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.

மேலும் செய்திகள்