விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியில் தெருநாய்கள் சாலையில் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. நாய்கள் துரத்துவதால் சிறுவர்கள் வீதிகளில் விளையாட அச்சப்படுகின்றனர். மேலும் வாகனஓட்டிகளின் வாகனங்கள் மீது நாய்கள் மோதுவதால் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. எனவே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.