சிவகங்கை மாவட்டம் பிரான்மலை, சிங்கம்புணரி நகர் பகுதியில் குரங்குகள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இந்த குரங்குகள் சாலையில் செல்லும் பொதுமக்களை அச்சுறுத்துகிறது. மேலும் வீட்டில் உள்ள அத்தியாவசிய பொருட்களை எடுத்து செல்கின்ற. இதனால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே குரங்குகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.