அரியலூர் ரெயில் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கு திடீரென பணத் தேவை ஏற்படும்போது, அவர்களின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே அவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரியலூர் ரெயில் நிலையத்தில் ஏ.டி.எம். எந்திரம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.