கரூர் மாவட்டம், புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி சார்பில் தோட்டக்குறிச்சி பகுதியில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டு அந்த சமுதாயக்கூடத்தை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு பல்வேறு விசேஷங்களுக்கு மிககுறைந்த வாடகைக்கு விட்டு வந்தனர். இந்நிலையில் தோட்டக்குறிச்சியில் இருந்த அரசு நடுநிலைப்பள்ளியின் ஒரு கட்டிடம் இடிக்கப்பட்டதன் காரணமாக அந்த பள்ளியில் இடிக்கப்பட்ட கட்டிடத்தில் பயின்ற மாணவ- மாணவிகளுக்கு இந்த சமுதாயக்கூடத்தில் பாடம் கற்பித்து வருகின்றனர். இதன் காரணமாக தோட்டக்குறிச்சி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்து வசதியற்ற பொது மக்கள் குறைந்த கட்டணத்தில் சமுதாயக்கூடத்தில் விசேஷங்கள் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள் விசேஷங்கள் செய்யும் போது சமுதாயக்கூடம் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.