அரியலூர் மாவட்டம், இலந்தைகூடத்தில் அமைக்கப்பட்டுள்ள காந்திபூங்கா பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. இதனால் மழை பெய்யும் போது மழை நீர் செல்ல வழி இன்றி இந்த பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள காந்தி சிலை அருகே மழை நீர் தேங்கி நிற்கிறது. மேலும் இந்த பூங்காவிற்கு சிறுவர்கள் அதிக அளவில் வருவதினால் அவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் ஏதும் இல்லாமல் அவர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து காந்தி பூங்காவில் சிறுவர்கள் விளையாடுவதற்கான உபகரணங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.