அரியலூர் மாவட்டம், கங்கவடங்கநல்லூர் கிராமத்தில் உள்ள சித்தேரியில் இருந்து செல்லும் வண்டி பாதை கைலாசபுரம் கிராமத்தை சென்றடையும் பாதையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.