கழிவறைக்கு செல்ல கல் மேல் பயணம்

Update: 2022-09-30 16:05 GMT

தஞ்சை மாவட்டம் வடக்கு பூதலூர் பகுதியில் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் நடத்தப்படும் தொடக்கப்பள்ளி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக பள்ளி கழிவறை பகுதியை மழைநீர் சூழ்ந்து கொண்டது. இதனால் மாணவ-மாணவிகள் கழிவறைக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இதன்காரணமாக மாணவர்கள் சிலர் தேங்கி கிடக்கும் மழைநீருக்குள் கல்லை ஆங்காங்கே வரிசையாக போட்டு பாதை அமைத்துள்ளனர். அதில் மெல்ல குதித்து, குதித்து கழிவறைக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள பள்ளி கழிவறை பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்