பெயர் பலகை வைக்கப்படுமா?

Update: 2022-09-30 15:27 GMT
பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் கிராமத்தின் 3 நுழைவுப்பகுதிகளிலும் ஊரின் பெயர் பலகை வைக்கப்படாமல் உள்ளது. இதனால் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் பெரிதும் குழப்பம் அடைகின்றனர். மேலும் துறையூர்-பெரம்பலூர் மெயின் ரோட்டில் இருந்து லாடபுரம் செல்லும் சாலையில் குறுகிய பாலம் உள்ளது. அங்கேயும் எந்த அறிவிப்பு பலகையும் இல்லை. இதனால் விபத்துகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. அதேபோல் வளைவுப்பகுதியில் ஒளிரக்கூடிய அறிவிப்பு பலகைகள் அமைக்கவும் சம்பந்தப்பட்ட‌ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்