சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் நாளுக்கு நாள் தெருநாய்கள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. நாய்க்கடியால் தினமும் பலர் பாதிக்கப்படுகின்றனர். இதனால் பெண்களும், சிறுவர்களும் தெருவில் செல்ல அச்சப்படுகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை நாய்கள் கடிக்க துரத்தும் போது அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். பொதுமக்களுக்கு தொல்லை தரும் தெருநாய்களை அப்புறப்படுத்துவார்களா?