பகுதிநேர ரேஷன்கடை வேண்டும்

Update: 2022-09-29 15:55 GMT

தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதி வலையப்பேட்டை அக்ரகாரத்தில் 5௦௦-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்கள் ரேஷன் கடைக்கு செல்ல நான்கு வழிச்சாலையை கடந்து ரேஷன் கடைக்கு சென்று வருகின்றனர். இதனால் ரேஷன் கடைக்கு சென்று வருபவர்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். இதன்காரணமாக ரேஷன் கடைக்கு பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வலையப்பேட்டை அக்ரகாரத்தில் பகுதி நேர ரேஷன் கடை அமைத்திட நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்