புகாருக்கு உடனடி தீர்வு

Update: 2022-09-29 14:37 GMT
  • whatsapp icon

நெல்லை மாவட்டம் திசையன்விளை பேரூராட்சி செல்வமருதூர் பகுதியில் தாமிரபரணி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகுவதாக, செல்வமருதூரை சேர்ந்த ஆறுமுகநயினார் 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. இதற்கு உடனடி தீர்வாக குடிநீர் குழாயில் உடைப்பு சரிசெய்யப்பட்டு உள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்