அரியலூர் மாவட்டம, தா.பழூர் ஒன்றியம், விக்கிரமங்கலம் அருகே உடையவர் தீயனூர் கிராமத்தில் பாக்கனேரி என்று அழைக்கப்படும் பாசன ஏரி உள்ளது. இந்த ஏரியில் நீர் நிரம்பி வெளியேறும் கலிங்கு பகுதி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உடைந்து விட்டது. இதனால் ஏரியில் தண்ணீரை முழுமையாக நிரம்பாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.