பன்றிகளால் சுகாதார சீர்கேடு

Update: 2022-09-29 12:34 GMT

கூத்தாநல்லூர் தாலுகா, வடபாதிமங்கலம் பகுதியில் பொது இடங்களில் பன்றிகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை குடியிருப்பு பகுதிகளில் புகுந்து அங்கு கொட்டப்படும் குப்பைகள், இறைச்சி கழிவுகள் ஆகியவற்றை தின்பதற்காக சாலையின் குறுக்கே சென்று வருகின்றன. மேலும் விவசாய பகுதிகளில் புகுந்து விளைப்பொருட்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. மேலும், சாலையில் கூட்டமாக சுற்றித்திரியும் பன்றிகளால் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்