புதுக்கோட்டை மாவட்டம். விராலிமலை தாலுகா, தென்னம்படி கிராமம் கூத்தகுடி கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பொதுமக்கள் யாரேனும் இறந்தால் சாலை வழியாக கொண்டு சென்று அப்பகுதியில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மயானத்திற்கு செல்லும் பாதையை சிலர் ஆக்கிமிப்பு செய்து வைத்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.