மயான கொட்டகை சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-29 12:30 GMT

திருவாரூர் மாவட்டம் 47.பெரியகொத்தூர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள சுடுகாட்டில் உள்ள மயான கொட்டகை உரிய பராமரிப்பின்றி காணப்படுகிறது. மேலும் அதில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. மேலும் மயான கொட்டகை புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் இறந்தவர்களை தகனம் செய்வதற்கு அந்த பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மயான கொட்டகையை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்