சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி 15-வது வார்டு மெயின் ரோட்டில் நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்லும் குழந்தைகள், பெண்கள் என அனைவரையும் துரத்தி அச்சுறுத்துகின்றன. இதனால் பொதுமக்கள் சாலையில் நடக்க மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சாலையில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.