விருதுநகர் மாவட்டம் சேத்தூர் வைப்பாறு இப்பகுதியினருக்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. தற்போது இந்த ஆற்றில் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. இதனால் ஆற்றின் நீர் வளம் பாதிக்கப்படுவதுடன் விவசாயம் போன்ற தொழில்வளங்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வைப்பாற்றில் வளர்ந்துள்ள கருவேலமரங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.