சிவகங்கை 48-வது காலனி சிவகங்கை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்கள் விளையாடும் மைதானத்தில் நாய்கள், காளைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் மாணவர்கள் அச்ச உணர்வுடனே மைதானத்தில் பயிற்சியை மேற்கொள்கின்றனர். மேலும் பள்ளி மைதானத்தில் கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பு அதிகளவில் காணப்படுகிறது. எனவே இதற்கு நிரந்தர தீர்வுகாண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.