சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள கண்மாய்கள் தூர்வாரப்படாமல் கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளன. தற்போது வடக்கிழக்கு பருவமழை தொடங்க உள்ள சூழலில் இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மரங்களால் கண்மாயில் மழைநீர் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கண்மாயை தூர்வாரி மழைநீரை சேமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்