தெருநாய்கள் தொல்லை

Update: 2022-09-28 12:32 GMT
திருச்சி மாவட்டம், பொன்மலைப்பட்டி, கொட்டப்பட்டு, வெங்கடேஸ்வராநகர், மொராய்ஸ்கார்டன் ரன்வேநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. அவை சாலையில் செல்வோரை துரத்தி கடித்து வருகின்றன. இந்த பகுதியில் இருந்து மட்டும் நாய் கடிக்கு 10-க்கும் மேற்பட்டோர் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று ஊசி போட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் சாலையில் நடமாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்