தேனியை அடுத்த ஆண்டிப்பட்டி உழவர்சந்தை, மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் சாலையோரத்தில் அமைக்கப்பட்ட நடைபாதை ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் சாலையில் இறங்கி நடந்து செல்லும் நிலை இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்துகளும் அடிக்கடி நடக்கிறது. எனவே நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்