அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட மீனாம்பாடி- செந்துறை சாலையில் அமைக்கப்பட்டுள்ள மின் மயானம் பழுதடைந்துள்ளது. இதனால் இப்பகுதியில் இறந்தவர்களின் உடல்களை எரிக்க பெரிதும் சிரமமாக உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.