சிவகங்கை மாவட்டம் 48காலனி அயுதப்படை குடியிருப்பு செல்லும் பகுதியில் நகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்தப்பள்ளி மைதானம் புதர் மண்டி காணப்படுகிறது. மேலும் நாய்கள், கால்நடைகள் அதிக அளவில் பள்ளி உள்ளே புகுந்து விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்தி புதர்களை அகற்ற வேண்டும்.