விபத்து அபாயம்

Update: 2022-09-27 12:44 GMT

பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் எசனை ஏரிக்கரையில் வளைவான பகுதி உள்ளது. இந்த இடத்தில் சாலையின் ஓரத்தில் ஆள் உயரத்திற்கு புல் புதர் மண்டி கிடக்கிறது. இதனால் வளைவு பகுதியில் வாகன ஓட்டிகள் செல்லும்போது எதிரே வரக்கூடிய வாகனங்கள் தெரியாத நிலை உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து எசனை ஏரிக்கரை பகுதியில் சாலை ஓரத்தில் உள்ள புல் புதர்களை அகற்றி சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்