பாதசாரிகளை அச்சுறுத்தும் கம்பி வேலி

Update: 2022-09-26 14:50 GMT
பெங்களூரு நந்தினி லே-அவுட் பகுதியில் நடைபாதை அருகே உள்ள நிலத்திற்கு கம்பி வேலி போடப்பட்டுள்ளது. இந்த வேலியில் முட்கள் போல் சிறு கம்பிகள் நீண்டு கொண்டு உள்ளது. இதனால் அந்த நடைபாதையில் செல்லும் பாதசாரிகள் அந்த கம்பிகளால் அடிக்கடி காயம் ஏற்பட்டு அவதி அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த கம்பி வேலியை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்