தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2022-09-26 14:34 GMT
கரூர் மாவட்டம், குளித்தலை ஆண்டார் மெயின் ரோடு தெருவில் இருந்து காங்கிரஸ் ரோடு தெருவிற்கு செல்லும் முகப்பு பகுதியில் கழிவு நீர் சாக்கடையின் மேல் பகுதி சிமெண்டு பலகை மற்றும் கான்கிரீட்டால் மூடப்பட்டிருந்த ஒரு பகுதி உடைந்து விட்டது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இந்த செய்தியின் எதிரொலியாக சேதமடைந்த சிமெண்டு பலகையின் உடைந்த பகுதி சரி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.
பொதுமக்கள், குளித்தலை.

மேலும் செய்திகள்