பரங்கிப்பேட்டை நகரில் புதிதாக அமைய பெற்ற தெருக்களுக்கு இதுவரை பெயர் பலகை வைக்கப்படவில்லை. இதனால் வெளியூர்களில் இருந்து இப்பகுதிகளுக்கு வரும் பொதுமக்கள், வழிதெரியாமல் சுற்றி திரியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக பலமுறை கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. ஆகவே அனைத்து தெருக்களுக்கும் பெயர் பலகை வைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியம்.