குறுகிய பாலத்தால் விவசாயிகள் அவதி

Update: 2022-09-25 16:00 GMT
கரூர் மாவட்டம், முனிநாதபுரத்தில் உள்ள புகழூர் வாய்க்காலின் குறுக்கே கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்து செல்வதற்காகவும், இருசக்கர வாகனங்கள் செல்வதற்காகவும் சிறிய அளவிலான பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக விவசாயிகள், பொதுமக்கள், பக்தர்கள் காவிரி ஆற்றங்கரை அருகே உள்ள முனியப்பசாமி கோவிலுக்கு சென்று வருகின்றனர். சிறிய பாலமாக இருப்பதால் விவசாயிகள் தங்களது இடுப்பொருட்களையும், விளைபொருட்களையும் இந்த பாலத்தின் வழியாக நான்கு சக்கர வாகனங்களில் எடுத்து செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குறுகிய பாலத்தை அகலப்படுத்தி கட்டி தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்