சாலையோரம் குவிந்து கிடக்கும் சாக்கடை கழிவுகள்

Update: 2022-09-25 14:43 GMT
பெங்களூரு ஜே.பி.நகர் பகுதியில் சிந்தூர் திருமண மண்டபம் அருகே உள்ள சாலையோரம் சாக்கடை கழிவுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்தப்பகுதியில் பயங்கர துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயமும் நிலவுகிறது. இதனால் அந்தப்பகுதியில் குவிந்து கிடக்கும் சாக்கடை கழிவுகளை அகற்ற வேண்டும் என்றும், அங்கு சாக்கடை கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும் என்றும் அந்தப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்