பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதிய பேராசிரியர்கள் இல்லாததால் மாணவ-மாணவிகளுக்கு சரியாக வகுப்புகள் எடுக்க முடியாமல் உள்ளது. இதனால் அவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. எனவே கூடுதல் பேராசிரியர்களை நியமிக்க வேண்டும். மேலும் தற்காலிக பேராசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.