பெரம்பலூர் உழவர் சந்தை அருகே வாரச்சந்தை நடைபெறும் இடத்தில் புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதியில் மது அருந்துதல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் நடந்து வருகின்றன. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதர்மண்டி காணப்படும் இடத்தை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.