மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழும் அபாயம்

Update: 2022-09-24 15:37 GMT
திருவெண்ணெய்நல்லூர் அருகே பேரங்கியூர் வடக்கு தெருவில் உள்ள 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் தூண்களில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து வருவதால் உள்ளே உள்ள கம்பிகள் வெளியே தெரிகின்றது. இதனால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மிகவும் பலவீனமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதன் அருகிலேயே குழந்தைகள் விளையாடி வருகின்றனர் எனவே விபத்து ஏற்படும் முன் பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிய தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் .

மேலும் செய்திகள்