பாலம் கட்டுவதற்கான பதாகை வைக்கப்படுமா?

Update: 2022-09-24 14:33 GMT
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே புங்கோடையில் இருந்து குந்தாணிபாளையம் நத்தமேடு வரை சாலை குண்டும், குழியுமாக இருந்தது. இதையடுத்து புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இந்நிலையில் வேட்டமங்கலம் பழைய காலனி அருகே தார் சாலையின் குறுக்கே பாலம் கட்டுவதற்காக திடீரென ஒகுழியை பறித்துள்ளனர். ஆனால் தார் சாலையின் குறுக்கே குழி பறிக்கப்படுவது குறித்து எந்த ஒரு பதாதைகளும் வைக்கப்படாததால் புங்கோடையில் இருந்து குந்தாணி பாளையம் நத்தமேடு செல்லும் வாகனங்களில் தார் சாலையில் குறுக்கே குழி பறிக்கும் இடம் வரை வந்து திரும்ப சென்று அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பாலம் கட்டும் பணி நடைபெறுகிறது என பதாதைகள் வைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்